Home இலங்கைமன்னாரிற்கு  சென்ற பிரதம நீதியரசர்   நீதிமன்ற செயற்பாடுகளை  பார்வையிட்டார்

மன்னாரிற்கு  சென்ற பிரதம நீதியரசர்   நீதிமன்ற செயற்பாடுகளை  பார்வையிட்டார்

by admin
 
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன்  சூரசேன  உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.   மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர்  பிரீத்தி பத்மன்  சூரசேன  மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் செய்தார்.

இதன் போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா,மன்னார் மாவட்ட   நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக  நீதவான்  எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும்  சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர்.  அதனைத்தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.இதன் போது நீதிமன்ற செயல்பாடுகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

#ChiefJustice # பிரதம_நீதியரசர் #Mannar #JudicialUpdate
#PreethiPadmanSurasena #MannarCourt #மன்னார்_நீதிமன்றம் #SriLankaLaw
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More