Home இலங்கைசெம்மணி அகழ்வு 10-ஆம் நாள்: குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தொடர்ந்து மீட்பு –

செம்மணி அகழ்வு 10-ஆம் நாள்: குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தொடர்ந்து மீட்பு –

by admin

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 10-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் (2026 மே 07, வியாழக்கிழமை) மேலும் குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் நான்கு புதிய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  புதைகுழிக்குள் இருந்து மனித எச்சங்கள் மட்டுமன்றி, உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆபரணங்கள் மற்றும் நாணயக் குற்றிகளும் மீட்கப்பட்டு வருவது விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய 10-ஆம் நாள் அகழ்வின் போது குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட 4 புதிய தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த தொகுதிகளில் இருந்து 2 எலும்புக்கூடுகள் இன்று முழுமையாகப் பூமியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளன.  கடந்த சில தினங்களாகப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மூக்குத்தி, நாணயக் குற்றிகள் உள்ளிட்ட 14 முக்கிய பொருட்கள் இன்று உத்தியோகபூர்வமாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மயானத்தின் தகன மேடை கட்டுமானத்திற்கு அடியில் காணப்படும் எலும்புக்கூடுகள் குறித்துச் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன்  தெளிவுபடுத்தியுள்ளார்.  முழுமையான எலும்புக்கூட்டுத் தொகுதிகளுக்கே இலக்கமிடப்பட்டு வருகிறது.  நேற்று அடையாளம் காணப்பட்ட மண்டையோட்டுப் பகுதி தகன மேடைக்கு அடியில் இருப்பதால், அதற்கு இன்னும் இலக்கமிடப்படவில்லை.குறித்த தகன மேடை கட்டுமானத்தை உடைத்து, அந்த எலும்புக்கூடு முழுமையாக அடையாளம் காணப்பட்ட பின்னரே அதற்குரிய இலக்கம் வழங்கப்படும் என தொிவித்தாா்

செம்மணி புதைகுழியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை  மொத்தம்  259 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 254  முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

செம்மணிப் புதைகுழியில் தொடர்ச்சியாகக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டு வருவது, அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களின் கொடூரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றது. குறிப்பாக, 14 வகையான சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பது, உயிரிழந்தவர்களின் காலம் மற்றும் பின்புலத்தை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த உதவும். தகன மேடை கட்டுமானங்களை உடைத்து அகழ்வை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமையானது, புதைகுழியின் பரப்பளவு நாம் கருதுவதை விடவும் விரிவானதாக இருக்கலாம் என்பதையே உணர்த்துகிறது.

#ChemmaniExcavation  #ChildSkeletons  #EvidenceSubmission  #HumanRemainsJaffna #ForensicInvestigation

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More