Home இலங்கைமாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பம்.

மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பம்.

by admin
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயலட் பார் தீர்ப்பாய முறையில் சற்று முன்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கூடியது.
அதன் போது மாணவி படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து ஐந்தாம் எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுநாதன் மன்றில் முன்னிலையானர் ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலை ஆகாத காரணத்தால் அது தொடர்பில் கலந்தலோசிக்க பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் ரட்ணம் கால அவகாசம் கோரியதை அடுத்து 15 நிமிடங்கள் மன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More