Home உலகம் பாக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31பேர் கொல்லபட்டுள்ளனர்:

பாக்தாத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31பேர் கொல்லபட்டுள்ளனர்:

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக் தலைநகர்  பாக்தாத் அருகே இன்று தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

iraq

ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற போரில் முஹம்மது நபியின் பேரனான இமாம் ஹசேன்  கொல்லப்பட்ட   நாளை  அனுஸ்டிப்பதற்காக  ஷியா பிரிவு மக்கள் கூடாரம் ஒன்றை அமைத்து  சடங்குகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தீவிரவாதி தனது  தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டை வெடிக்க வைத்ததாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எவரும் உரிமை கோராத நிலையில் ஐஎஸ் அமைப்பினர்தான் மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More