Home இலங்கை யாழில் புகையிரதத்துடன் வைத்தியரின் கார் மோதி விபத்து

யாழில் புகையிரதத்துடன் வைத்தியரின் கார் மோதி விபத்து

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்  நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதத்துடன் வைத்தியரின் கார்  மோதி விபத்துக்குள்ளாகியதில் சிறு காயங்களும் இன்றி தெய்வாதீனமாக பெண் வைத்தியர்  உயர்தப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள ஆத்திச்சூடி விநாயகர் ஒழுங்கையிலுள்ள  புகையிரதக்கடவையிலேயே இவ்விபத்து இன்று மதியம் 1.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை சமநேரத்தில் கடப்பதற்கு எதிரெதிர் திசையில் வந்த காரும் முச்சக்கரவண்டியொன்றும் முயற்சித்துள்ளது.

அச்சமயம் காங்கேசன்துறையிலிருந்து  வந்துகொண்டிருந்த  அதிசொகுசு புகையிரதம் குறித்த கடவையை நெருங்கியுள்ளது.

அச்சமயம் முச்சக்கரவண்டியை அதன் சாரதி பின்புறமாக இயக்கியநிலையில்  கார்  புகையிரதத்துடன் மோதுண்டு திரும்பியுள்ளது . உள்ளே இருந்த பெண் வைத்தியர் அதிஸ்ரவசமாக  சிறு காயங்கள் கூட ஏற்பாடாமல் தப்பித்தார்.

குறித்த புகையிரதக்கடவை  அமைக்கப்பட்டிருந்த சாதாரண புகையிரத கடவை கதவு  முன்னர் ஒரு விபத்தின் இயக்கமுடியாததால்  கடவை காப்பாளர்  சைகை மூலமே வாகனங்களை நிறுத்துவதாக புகையிரத ஊழியர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More