Home உலகம்பிரான்ஸில் இடம்பெற்ற படகு விபத்தில் பிரித்தானிய பெண் பலி

பிரான்ஸில் இடம்பெற்ற படகு விபத்தில் பிரித்தானிய பெண் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரான்ஸின் தென்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பிரித்தானியாவினைச்  சேர்ந்த பெண்மணியொருவர் பலியாகியுள்ளார். அவிக்னொன் என்ற பகுதியில் உள்ள ரொனே ஆற்றில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான  ஒரு குழந்தையின் தாயான ஜெசே வில்கெஸ்  ( jess-wilkes )  என்பவரே பலியாகியுள்ளார்.

படகு எச்சரிக்கை ஓளிவிளக்கில் மோதியவேளை  அவர் அதிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவத்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பலியானவர் பிரித்தானியாவின்  கென்ற் பகுதியைச்  சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More