Home இலங்கையுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்…

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்…

by editortamil


யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டமொன்றின் போது இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என தமிழ் மக்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையுண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் நடைபெற்ற சமாதானத்தை கட்டியெழுப்பும் ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்றில் இந்த உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உரிய வேகத்தில் நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More