Home இலங்கைகோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுகள்!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல நிகழ்வுகள்!

by admin
யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
ஏற்பாட்டுக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கை வருமாறு,
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
யாழ் மாவட்டம்
24-11-2017
அன்பார்ந்த தமிழ்த் தேச மக்களுக்கு!
மாவீரர் நாள் 2017
தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் யாழ் மாவட்டத்திலுள்ள மாவீரர்கள் மீளாத்துயில் கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற மாவீரர் குடும்பங்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்த துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள இராச வீதியில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வில் அனைத்து மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள்இ உறவினர்கள்இ நண்பர்கள், தமிழ்த் தேச மக்கள்,முன்னாள் போராளிகள், பொது மக்கள் ,தமிழ் மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிப்பவர்கள்இ ஊட நண்பர்கள்இ பொது அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அனைவரையும் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
இடம்:இராச வீதிஇ (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக)
திகதி: 27-11-2017 (திங்கட்கிழமை)
நேரம்: மாலை 5.00 மணிக்கு முன்னர் வருகை தரவும்
இணைப்பாளர்
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு
யாழ்மாவட்டம்
தொடர்புகளுக்கு: 0774624316
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More