Home இந்தியா போபாலில் சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் உத்தரவு

போபாலில் சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் உத்தரவு

by admin

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேர்  காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்துமாறு அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.பாண்டே மேற்கொள்வார் எனவும்  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 31-ம் திகதி போபால் மத்திய சிறையிலிருந்து சிமி தீவிரவாதிகள் 8 பேர் தப்பியதாகவும் அவர்கள் 8 பேரும் காவல்துறை  என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   இவ்வாறு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து  பல தரப்பிலிருந்தும்  பலமான விமர்சனங்கள எழுந்துள்ள நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் சிங் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More