Home இலங்கைசுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்…

சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

சுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிராக தமிழர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமையை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

13 பேர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் 15 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிச் சலவை, நிதி மோசடி, போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து நீதிமன்றில் இந்த 13 பேருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இவ்வாறு நிதி திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த 13 பேருக்கு எதிராக பிழையாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More