Home இலங்கைதுறைமுக ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது..

துறைமுக ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது..

by admin

துறைமுக ஊழியர்களின் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து சாதகமான பதில் கிடைத்திருப்பதனை அடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுக சேவையில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் கடந்த 9ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்திருந்தனர்.

ஹம்பாந்தோட்டை, மாகம்புறை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முன்னர் பணியிலிருந்து நீக்கப்பட்ட இந்த ஊழியர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More