Home இலங்கை பதுளை தமிழ்  பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை – விசாரணைக்கு உத்தரவு…

பதுளை தமிழ்  பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை – விசாரணைக்கு உத்தரவு…

by admin

பதுளை தமிழ்  பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, காவற் துறை  மா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு, முதலமைச்சர் பணித்திருந்த நிலையில், கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டமே தன்னால் கட்டுப்பட முடியும் என கூறிய அந்த அதிபர், சாமர சம்பத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, குறித்த அதிபரை முதலமைச்சர் அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் குறித்து விரைவாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு பணித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More