Home உலகம்சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சிறந்த அணி – டுவைன் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சிறந்த அணி – டுவைன் பிராவோ

by admin


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியாகவும், கௌரவமாகவும் உள்ளது என டுவைன் பிராவோ  (Dwayne Bravo  )தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் அணியில் மீண்டும் பிராவோ இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து சென்ன்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்துக்கு அளித்த பேட்டியிலேயே டுவைன் பிராவோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னை அணிக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்த அவர் தான் விளையாடிய அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சிறந்த அணி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரையும் எங்கள் குடும்பத்தில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களையும் காணவும் ஆவலாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாத ஐபிஎல் என்பது எப்படி இருக்கும் என்பதன் தாக்கத்தை கடந்த 2 வருடங்களில் உணர்ந்து இருப்பீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More