Home இலங்கை வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.எ. நியாஸ் பதவி ஏற்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் எஸ்.எம்.எ. நியாஸ் இன்று(5) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் பிற்பகல் நிகழ்வு இடம்பெற்றது.

வட மாகாண சபையின் உறுப்பினராக இருந்த றயிஸ் ராஜினமா செய்து கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். இவர் பேராதனை பல்கலைக் கழகத்தில் புவியியல் துறையில் சிறப்பு கலை பட்டதாரி என்பதுடன் தென்கிழக்கு பல்கலைகழத்தின் ஆங்கில மொழி துறையின் முன்னாள் போதனாசிரியர் ஆவார்.

இவர் தனது ஆரம்ப கல்வியினை மன்னார் பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் பயின்றார். இடை நிலைக் கல்வியினை மாவனல்ல அல்அஷ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் உயர் தர கல்வியினை மன்னார் முசலி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More