Home இந்தியாபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இருவர் கைது :

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இருவர் கைது :

by admin


இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின்; சர்வதேச எல்லையான ஆர்.எஸ் புராவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சமூக வலைதளத்தில் இரகசிய தகவல்களை வெளியிட்டு வந்த 2 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவர் சர்வதேச எல்லைப் பகுதியான சுசத்கார்க்கில் பாதுகாப்பு நிறுவனங்களின் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக  காவல்துறையினருக்கு கிடைத்த  தகவலை அடுத்து குறித்த  2 பேரையும் கைது செய்து  விசாரணை நடத்தியதில்  அந்த இருவரும் இராணுவ முகாம்கள், பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் ஆகியவற்றின் அமைவிடங்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More