Home இலங்கை போர் குற்றங்களை செய்த இராணுவத்தினர், சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சிக்குவார்கள்…

போர் குற்றங்களை செய்த இராணுவத்தினர், சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சிக்குவார்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

War crime concept word cloud background

போர் குற்றங்களை செய்த இலங்கை இராணுவ அதிகாரிகள் சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சிக்குவார்கள் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பை செயற்படுத்துமாறு ஐ.நா பிரதி மனித உரிமை ஆணையாளர் கெட் கில்மோர் 137 நாடுகளிடம் கோரிக்கை விடுத்தமை காரணமாகவே அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு அமைய போருடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களை கைதுசெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே இலங்கை இராணுவ அதிகாரிகள் 25 பேரின் பெயர்கள் மனித உரிமை பேரவையில் குறிப்பிடப்பட்டுள்ளன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க ஆகியோரின் பெயர்களும் அதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More