Home இலங்கைஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு மஹிந்த, பிரதமரிடம் கோரிக்கை

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு மஹிந்த, பிரதமரிடம் கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் கோரியதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது இந்தக் கோரிக்கையை தாம் விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை ஊழியர்களை நிரந்தரமாக்குமாறு பிரதமர், அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு பணிப்புரை விடுத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சாசனம் தொடர்பிலும் பிரதமருடன் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More