89
மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேருந்து ஒன்று வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தாவர்கள் மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு சாதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love