91
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையின் அடையாளத்தை உறுதி செய்து சமாதானத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் அதிக சிரத்தை காட்டி வருவதாகவும் சில தரப்பினர் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் இவ்வாறான சதி முயற்சிகள் முதலிலேயே முறியடிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love