Home இலங்கை முறிகண்டியில் விபத்து – இராணுவ வீரர் உயிாிழப்பு

முறிகண்டியில் விபத்து – இராணுவ வீரர் உயிாிழப்பு

by admin

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம காவல்துறைப்  பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று டிவௌ்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர்  ஒருவா் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.இன்று  காலை  முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்  நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்த முற்பட்ட போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றதனால்  எதிரே வந்த வாகனத்துடன்   மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனக் கருதி விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பார ஊர்தியை செலுத்த முற்பட்டாா். இதன்  போது , கப் வாகனத்துடன் பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்த நிலையில்  அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More