81
ஊடகவியலாளர் கீத் நோயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யபட்ட இந்த மூன்று இராணுவத்தினருள் இராணுவ மேஜர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love