கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நிச்சயமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நிச்சயமாக சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்கும் மாபெரும் போராட்டம் இந்த ஆண்டில் ஆரம்பமாகும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி ஒருவரையும் சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment