சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு அனுமதிக்கப்படாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது மேற்கொள்ளப்படக்கூடிய அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு மட்டுமே சுதந்திரக் கட்சியின் ஆதரவு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனம் குறித்த செயற்குழுவினால் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல் திருத்தச் சட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய இலங்கை என்ற விடயத்தில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment