லண்டனில் கடந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து போல அங்குள்ள 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் விபத்து நிகழலாம் என கருதி அங்கு வசிக்கும் 800 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் வெளியே பூசப்பட்டுள்ள அலங்கார ஓடுகள் எளிதில் தீ பிடிக்கும் வண்ணம் இருப்பதால் அதை நீக்குதல் , கட்டிடத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள் ; பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் தகுந்த பாதுகாப்போடு அமைக்கப்படவுள்ளதன் காரணமாகவே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கென்சிங்டனில் அமைந்துள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற தீ விபத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment