மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவமளித்து உமா ஒயா திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
உமா ஒயா திட்டம் காரணமாக பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (30) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சிவில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் உமா ஒயா திட்டத்தின் காரணமாக ஊவா மாகாண மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
Spread the love
Add Comment