குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் போலியான தீர்வுத் திட்டங்கள் முன்வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் தெளிவான சரியான தீர்மானம் ஒன்றை அரசாங்கம் எடுக்க காலம் தாழ்த்தக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் போலியான தீர்மானங்களை எடுக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment