குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு பொருத்தமுடையதல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள சட்ட விளக்க அறிக்கையினால் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் இன்றைய தினம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமென சட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லையென்றால் குறித்த சில சரத்துக்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment