Home இந்தியா சிறுவர்களுக்குரிய சர்வதேச அமைதிக்கான பரிசிற்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:-

சிறுவர்களுக்குரிய சர்வதேச அமைதிக்கான பரிசிற்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:-

by editortamil

சிறுவர்களுக்குரிய சர்வதேச அமைதிக்கான பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த  நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த, 12 வயதுடைய சக்தி  என்ற சிறுவனே அமைதிக்கான பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

அரசாங்கப்  பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்த போது, அங்கு அவர் அவமதிக்கப்பட்டதுடன்   தகாத வார்த்தைகளால் வஞ்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  பாடசாலைப்  கல்வியை  நிறுத்திய இவர்  தெருக்களில் யாசகம் கேட்பது, ஊசி பாசி மணிகளை விற்பது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார்.

படிப்பை தொடர வைத்தது

படிப்பை தொடர வைத்தது

சிறுவன் சாலையில் பிச்சையெடுப்பதை பார்த்த தன்னார்வ தொண்டு  அமைப்பு ஒன்று சக்தியின் பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. அதன் பின்னர்,  அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு சக்தி  தனது கல்வியை தொடர்ந்தார். அந்த திட்டத்தின் நோக்கமே பாடசாலைப் கல்வியை இடையில்  நிறுத்திய பிள்ளைகளை மீண்டும் கல்வியில் தொடர வைப்பதாக அமைந்தது.

ஏளன பார்வை

ஏளன பார்வை

இந்தியாவில்  நரிக்குறவ சமூகம் என்றால் கேலியாகவும்,  கிண்டலாகவும்  பார்க்கப்படும் சூழல் காணப்படுகிறது. அவர்களும் மனிதர்கள் என்பதை பெரும்பாலானோர் நினைப்பதில்லை என சமூக ஆர்வலர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய சூழலில் பாடசாலை கல்வியை தொடர்ந்ததால் தனது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம், சமூகத்தில், கிடைத்த கௌரவம் ஆகியவற்றை பார்த்தவுடன் சக்திக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதனால் தம்மை போல் படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என முயற்சி செய்துள்ளார்.

மலைவாழ் குழந்தைகள் படிப்பை தொடர...

மலைவாழ் குழந்தைகள் கல்வியை தொடர…

இந்நிலையில் பாடசாலைப் கல்வியை  இடையில் முடித்துக் கொண்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள மலைவாழ் குழந்தைகள் 25 பேரை பாடசாலையில் இணைத்துவிட்டுள்ளார். இதற்காக அவர் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியதால் தற்போது 25 குழந்தைகள் கல்வியை  தொடர்கின்றனர்.

அமைதிக்கான விருது

அமைதிக்கான விருது

சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமை, குழந்தை தொழிலாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக 169 குழந்தைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சக்தியின் பெயர் பரிந்துரை

சக்தியின் பெயர் பரிந்துரை

அந்த 169 பேரில் சக்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தொண்டு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், கல்வி கற்பதால் சக்தியின் வாழ்க்கை முறை மட்டுமல்லாது அவரது சமூகத்தின் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது. அதனால் அவரது பெயரை விருதுக்கு பரிந்துரைத்தோம். 169 பேரில் மிகவும் சிறிய வயதுடையவர் சக்தி ஆவார் என்றனர். இந்த விருதை இதற்கு முன்னர் மலாலா வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More