குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி பட்டம் தொடர்பில் காலம் தாழ்த்தாது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தமது அரசாங்கம் ஆரம்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உண்மையில் அவ்வாறு ஆரம்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ பட்டம் தொடர்பில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் நிலவினால் அது இலங்கை மருத்துவ பட்டம் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment