Home இலங்கை கைதடி நவீன் பாடசாலை மாணவர்களுக்காக சிமாட் வகுப்பறை

கைதடி நவீன் பாடசாலை மாணவர்களுக்காக சிமாட் வகுப்பறை

by admin
யாழ்.கைதடியில் உள்ள நவீன் பாடசாலை மாணவர்களுக்காக ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டட் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தினால் அமைத்து கொடுக்கப்பட்ட சிமாட் வகுப்பறை திறப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

அப் பாடசாலையில் கல்விகற்க்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் தமது தொழில்நுட்ப கல்வியை வளர்த்து கொள்ளும் முகமாக சுமார் 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறையை ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டர் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெனோத தொறதெனிய சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.

மேலும் இவ் நிகழ்வில் ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டட் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின்
வெவேறு பிரிவுகளின் முகாமையாளர்களான அசோக் சந்திர சேகரம், அசோக் பாலசுந்தரம், நெவில் சமரநாயக்க, சுஜீவ ராஜபக்ச, லந்திறா, பிரசன்ன வீரக்கோன், சஞ்சீவ டிசேரம், பி.சயந்தன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More