மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவிலுள்ள ஊறணி, நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காவல்துறையினர் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்றுக்காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட முற்பட்டபோது மூவர் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த இரு காவல்துறையினரும் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
Add Comment