Home இலங்கை உயிலங்குளத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்களவரான வில்லியமும், 67 பொது மக்களும் நினைவுகூரப்பட்டனர்..

உயிலங்குளத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்களவரான வில்லியமும், 67 பொது மக்களும் நினைவுகூரப்பட்டனர்..

by admin

  குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  மன்னார்… 

மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985 ஆம் ஆண்டு பேரூந்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின்  நடத்துனரான வில்லியம் மற்றும்  67 பொது மக்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில்  சுடர் ஏற்றி பூ தூவி அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை அரச படைகளினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழின படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளை மே 12 ஆம் திகதி இன்று சனிக்கிழமை ஆரம்பித்து மே 18 ஆம் திகதி வரை தமிழின படுகொலை நினைவு வாரத்தை அனுஸ்டிப்பதாகவும்,    இதன் முதல் நாள் நிகழ்வின் 3 ஆவது  நிகழ்வாக மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தில் இன்று (12) அனுஸ்டிப்பதாகவும்  வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

1985 ஆம் ஆண்டு உயிலங்குளத்தில் பேரூந்தில் பயணித்த பயணிகளை இறக்கி இராணுவம் சுட முயற்சி செய்த போது குறித்த பேரூந்தின்   நடத்துனரான பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த வில்லியம் என்பவர் தன்னை சுட்டு விட்டு மக்களை சுடுங்கள் என்றார்.

இந்த நிலையில் இலங்கை இராணுவம் அவரை சுட்டு படுகொலை செய்து விட்டு ஏனைய 67 பயணிகளையும் சுட்டு படுகொலை செய்தனர். அந்த இடத்திலே குறித்த நினைவு அஞ்சலியை நடத்துகின்றோம். எனவே இந்த படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதிப்பொறிமுறைக்கு ஊடக நீதி கிடைக்க வேண்டும் என்றும் இவர்களது மரணத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அந்த வகையில் சர்வதேசத்தினூடாக நீதியை பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More