Home இலங்கை கடற்படையினரின், 22 வருட கால வீட்டுக் காவல் முடிவில், வரதராஜப் பெருமாளின் மகோற்சவம்!

கடற்படையினரின், 22 வருட கால வீட்டுக் காவல் முடிவில், வரதராஜப் பெருமாளின் மகோற்சவம்!

by admin

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரதோற்சவம் பக்திபூர்வமாகவும் சிறப்பாகவும் இடம்பெறவுள்ளது. மறுநாள் திருவடிநிலையில் புனித கடற்கரையில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

இரதோற்சவத்திற்கு வருகை தருகின்ற பக்தர்களின் நலன் கருதி யாழ்ப்பாணம் – காரைநகர் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஆலயத்தினூடாக சேவையை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயச் சூழலில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீராகாரம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினர் 1996 ஆம் ஆண்டு யாழ். குடாநாட்டைக் கைப்பற்றிய பின்னர், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயச் சூழலில் கடந்த 22 வருட காலம் இலங்கைக் கடற்படையினரின் பிரசன்னம் இருந்தது.

ஆலய வளாகத்தை கடற்படையினர் சூனியப் பிரதேசமாக மாற்றியிருந்தனர். வரதராஜப் பெருமாளைத் தரிசிப்பதற்குச் செல்லும் பக்தர்கள் பெரும் பாதுகாப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கடற்படையினரினர் படிப்படியாக அகற்றப்பட்டனர். ஆலயச் சூழலில், அன்னதான மடம் ஒன்றில் எஞ்சியிருந்த கடற்படை காவலரணும் கடந்த மாதம் (2018.06) அகற்றப்பட்ட நிலையில், படையினரின் பிரசன்னம் இன்றி இவ்வருடம் திருவிழா இடம்பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More