இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

இந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது


இந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது எனவும் இந்த நிலைக்கு தயாசிறி ஜயசேகரவே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ள பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க 2019ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே எனவும் தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர தான் சூதாட்டக்காரர்களை கிரிக்கெட்டுக்குள் கொண்டு வந்துவிட்டு இன்று அவரே சூதாட்டம் தொடர்பில் கதைக்கின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட போயா தின நிகழ்வொன்றின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார் எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர் தான் ஒரு சட்டத்தரணி எனக் கூறினாலும், சட்டத்தை படித்து தெரிந்துக்கொள்ளாமல், கிரிக்கெட் நிர்வாகத்துக்குள் சூதாட்டக்காரர்களை வரவழைத்தார் எனவும் இன்று சூதாட்டக்காரர்களே அனைத்து விளையாட்டுக்களையும் அழிப்பதாகவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.