உத்தர பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் புகையிரதம் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் புகையிரத நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் புகையிரதத்தின் 6 பெட்டிகள் தடம்புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற புகையிரத காவல்துறையினரும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment