Home இலங்கை 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழர் இயற்கை எய்தினார்

20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழர் இயற்கை எய்தினார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை இயற்கை எய்தியுள்ளார்.

கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.

காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருபது பேரையும் காப்பற்றிய குறித்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பருத்தித்துறையை சேர்ந்தவராவர். 1937ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 25வயதில் 1962ஆம் ஆண்டு காவல்துறை சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து கொண்டுள்ளார்.

பின்னர் காவல்துறை சேவையில் சார்ஜென்ட் தர த்திற்கு உயர்ந்தவர் 1989ஆம் ஆண்டு தனது 52ஆவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர் தனது 82 வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 03ஆம் திகதி பூரண காவல்துறை மரியாதையுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More