பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார். அபுதாபி சென்ற அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யான் வரவேற்றுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள மதநல்லிணக்க கூட்டத்தில் பாப்பாணடவர் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் சுமார் 120,000 பேர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏமன் போரில் சவூதி அரேபியா பங்கேற்றுள்ள நிலையில் அரேபியா செல்லும் முன் ஏமன் போர் குறித்து கவலை தெரிவித்த பாப்பாண்டவர் ஏமனில் பல குழந்தைகள் பசியால் வாடுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது ஐக்கிய அமீரகம் சென்றுள்ள போப்பாண்டவர் ஏமன் பிரச்னை குறித்து அமீரகத்துடன் பேசுவாரா என கேள்வி எழுப்பப்பட்டள்ளது
அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் பாப்பாண்டவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment