Home இலங்கை விபத்தில் காயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு கடமைக்கு சென்ற நீதவான்

விபத்தில் காயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு கடமைக்கு சென்ற நீதவான்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் கடமைக்கு சென்றுள்ளார். இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளும், பட்டா ரக வாகனமும் விபத்துக்கு உள்ளான போது மோட்டார் சைக்கிள் ஓட்டியான கோப்பாய் வடக்கை சேர்ந்த 34 வயதான சின்னத்தம்பி வசந்தன் என்பவர் காயமடைந்தார்.

அவ்வேளை இவ்வீதியூடாக சாவகச்சேரி நீதிமன்றுக்கு கடமைக்கு சென்ற நீதிவான் விபத்தில் காயமடைந்த இளைஞனை மீட்டு தனது காரில் ஏற்றி சென்று சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு கடமைக்கு சென்றார் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More