Home உலகம் சீனாவுக்கு உளவு பார்த்த சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை :

சீனாவுக்கு உளவு பார்த்த சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை :

by admin


சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதனையடுத்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடந்த இரண்டு வார கால விசாரணையில் 62 வயதாகும் சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரியான கெவின் மல்லோரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெவின் மல்லோரி 25,000 அமெரிக்க டொலர்கள் பெற்றுக்கொண்டு அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை சீனாவுக்கு விற்றதற்காக அவருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் பணியில் இருந்த காலத்தில், சி.ஐ.ஏ-வின் ரகசிய ஆவணங்களை அணுகுவதற்கான அனுமதி இருந்த நிலையில் கெவின் மல்லோரி நாட்டை மட்டுமல்லாது, நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரையே பணயம் வைப்பவர்களின் பாதுகாப்பையும் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் சச்சாரி டெர்விலிகர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் சி.ஐ.ஏ முன்னாள் அதிகாரி ஜெர்ரி சன் சிங் என்பவரும் சீனாவுக்கு உளவு பார்த்த குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 #CIAofficer #KevinMallory #china #usa #சீனா #உளவு #சி.ஐ.ஏஅதிகாரி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More