Home உலகம் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் தாக்குதல் – ஏவுகணை ஏவப்பட்ட இடம் கண்டுபிடிப்பு?

அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத் தாக்குதல் – ஏவுகணை ஏவப்பட்ட இடம் கண்டுபிடிப்பு?

by admin

சவூதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய் வயல் ஒன்றைத் தாக்க ட்ரோன் மற்றும் ஏவுகணை ஏவப்பட்ட இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும், பாரசீக வளைகுடாவின் வடக்கு முனையிலிருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

ஏமனிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராக சவூதியின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தெற்கு திசையை நோக்கி நிலை நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களால் இந்த ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது.

சவூதி அரசு தலைமையில், மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவம் ஏமன் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற அதேவேளை ஏமன் அரசை எதிர்த்துப் போரிட்டு வரும் ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் ஆதரவளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More