98
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்ய உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் மார்ச் 15 ஆம் திகதி சார்க் அரச தலைவர்களுக்கிடையில் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த நிதியம் தாபிக்கப்பட்டது. #கொரோனா #சார்க் #டொலர்கள் #அன்பளிப்பு
Spread the love