Home இலங்கை MT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை

MT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு வௌிநாடு செல்லத் தடை

by admin

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய MT NEW DIAMOND கப்பலின் கப்டனுக்கு நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் அவா் நீதிமன்றில் முன்னிலையாகிய போதே நீதிமன்றம் இவ்வாறு தடை விதித்துள்ளது

MT NEW DIAMOND கப்பலின் கப்டன் நீதிமன்றில் முன்னிலை

இலங்கை கடற்பரப்பில் தீபபற்றிய MT NEW DIAMOND கப்பலின் கிரேக்க நாட்டு கப்டனான தீரோஸ் ஹீலியாஸ் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் இன்றைய தினம் குறித்த கப்டனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுத்த அறிவித்தலுக்கமைய அவா் இன்றுமுன்னிலையாகியுள்ளார்.

தீயைக் கட்டுப்படுத்த தானியங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறியமை மற்றும் தீப்பரவல் குறித்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த கப்டனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #MTNEWDIAMOND #கப்டன் #நீதிமன்றில் #தீப்பற்றிய

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More