
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்ற உணவு தவிர்ப்பு போராட்டம் 11 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இப்போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இடம்பெற்று வந்த நிலையில் 11 ஆவது நாளான இன்று(11) பொலிகண்டி வரையிலான பேரணியின் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சுமித்ரா ஜகதீசன் , அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவருமான தாமோதரம் பிரதீபன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் சுழற்சி முறையான இப்போராட்டத்தில் பல்வேறு தடைகளை உடைத்து முன்னெடுத்துள்ளோம்.அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகவும் விசேடமாக புரிந்துணர்வுடன் செயற்படும் காவல்துறையினருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவிப்பதாக தத்தமது கருத்தில் கூறினர் #உணவுதவிர்ப்புபோராட்டம் #அம்பாறை #சுழற்சிமுறை
Add Comment