இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலையில் மார்கழி இசை விழா

யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழி இசை விழா எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.  குறித்த இசைவிழாவானது, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறும்.

அத்துடன் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் குறித்த உற்பத்தியாளர்களினுடைய கண்காட்சியும் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு அண்மையில் உள்ள மண்டபத்தில் இதன் போது இடம்பெறவுள்ளது.
உள்ளூரிலே காணப்படுகின்ற கலைஞர்களது திறமைகளையும் அவர்களுடைய கலைத்திறனையும் வெளிக்கொணர்வதற்காகவே குறித்த நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ் வணிகர் கழகம் தெரிவித்தது.
குறித்த நிகழ்வுகளில் இலங்கை கலைஞர்கள் மட்டுமின்றி இந்திய கலைஞர்களும் இணைந்து தங்களுடைய கலைத் திறனை வெளிப்படுத்த உள்ளனர்.  குறித்த நிகழ்விற்கு பொதுமக்களுக்கு எந்த வித கட்டணங்களும் வசூலிக்கப்டப்படாது இலவசமாக பார்வையிட முடியும்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.