Home இலங்கை ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டும் – மனோ கணேசன்

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டும் – மனோ கணேசன்

by admin

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ராவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த படுகொலை வழக்கு தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்யப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருப்பதை தாம் வரவேற்பதாக அவர்  ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் காவல்துறை மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள்; குறித்தும் திருப்தியடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீதித்துறை மீது உலகமும், தமிழர்களும் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்திருப்பது நியாயமானது என தாம் கருதுவதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More