Home இந்தியா சென்னையில் எஸ்.பி.ஐ. காப்புறுதி நிறுவன கிளையில் இன்று தீவிபத்து

சென்னையில் எஸ்.பி.ஐ. காப்புறுதி நிறுவன கிளையில் இன்று தீவிபத்து

by admin

தமிழ்நாடு சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. காப்புறுதி நிறுவன கிளையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இன்று காலை  கட்டிடத்தின் மேல் மாடியில்  பற்றிய தீயானது   கட்டிடம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில்   அங்கிருந்த  தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த தீயணைப்பு படையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  கணிணி மற்றும் பல மினசபாதனப் பொருட்கள் எரிந்துள்ளமையினால் கரும்புகை வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.  குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More