Home உலகம் ஹெய்ட்டியில் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு

ஹெய்ட்டியில் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஹெய்ட்டியில் மெத்தியூ புயல் என பெயரிடப்பட்ட புயல் தாக்கத்தினால் உயரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிகவும் கடுமையான பாதிக்கப்பட்ட சில நகரங்களை தரைவழியாக சென்றடைய முடியாது எனவும் வான் அல்லது கடல் வழியாக சென்றே நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்குக் கரைப் பகுதியிலேயே அதிகளவில் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் புயல் காற்றினால் பாரியளவிலான கட்டங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More