Home அரசியல் லசந்த, தாஜூடீன் கொலைகள் குறித்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாகும் என பிரதமர் நம்பிக்கை

லசந்த, தாஜூடீன் கொலைகள் குறித்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாகும் என பிரதமர் நம்பிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்ரமதுங்க, பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் ஆகியோரின் கொலைகள் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் போன்றன குறித்த விசாரணைகள் துரித கதியில் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் மாத இறுதியளவில் விசாரணைகள் பூர்த்தியாகும் என எதிர்பார்ப்பதாகவும் காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதன் ஊடாக காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More