Home இலக்கியம் காவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்

காவல்துறை மா அதிபர் தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பிரத்தியேக செல்லிடப்பேசி இலக்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார். பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் செய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தால் அது குறித்து நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் என காவல்துறை மா அதிபர் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள், 0718592020  என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு இது பற்றிய முறைப்பாடுகளை செய்ய முடியும் என காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் மிகவும் அவசரமான நிலைமைகள் இருந்தால் தம்மை தொடர்பு கொண்டு அவற்றை அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சின்ன சின்ன முறைப்பாடுகள் காவல்துறையினரால் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பிற்கு தனது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பதிலளிப்பார் எனவும், அவர் தமக்கு தகவல்களை வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More