பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்தக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரில் இன்று கவனயீர்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு மற்றும் தொழிற் சங்கங்கள் இணைந்து காந்தி பூங்கா முன்பாக தொழிலாளர்களுக்கு வாராந்தம் 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும், அரசாங்கமே ஏன் மௌனம் நாட் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்த உத்தரவிடு, காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்கங்களே உடனே விலகிப்போ உள்ளிட்ட கோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியும் கோஷங்களை எழுப்பியும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் கவனயீரப்பு போராட்டம்
251
Spread the love
previous post

